புதன், 29 ஆகஸ்ட், 2012


பலகாலம் தேங்கி உறைந்த நீரைப்பற்றி
அறியாதிருந்திருக்கிறேன்
ஊசியெனக் குத்தி உலர்கிறது 
அவ்வப்போது சாரல்
முகில் திரண்டு அலைந்திருந்த தெருக்கள்
மங்கலாக நினைவில் நகர்ந்தது
நனையாமல் மழையில் சென்றதை
எப்படிப் புரிந்துகொள்வதெனப் பார்க்கையில்
மழையாவதற்கான தீவிரம் சூழந்து
எழுந்து செல்கிறது நன்னீர்.