சனி, 15 செப்டம்பர், 2012

வெற்றுவெளி


மொழிகள் புதைந்து மறைந்த நெடுஞ்சாலையில்
கருப்பு நிற சாம்பல் நிற பறவைகள்
நீயும் நானும் கரைத்த மௌனத்தில்
காற்று உடைகையில்
எனதன்பிற்குரிய சொற்களை
சுவைத்துக்கொண்டிருக்கும் கழுகுகள்
துயரத்தின் ஈர வலையை அண்டாத
கவிதையின் இரு துருவங்களுக்கிடையில்
ஒருசொல் கூட இல்லாமலிருக்கிறது.