வியாழன், 25 ஏப்ரல், 2013


திறந்து மூடும் கடல்




















கடல் எல்லாப்பக்கமும் திறந்திருக்கிறது.
அசைந்துகொண்டே எங்கும் செல்லாது
தன்னில் தானே மிதந்தபடி
துளித்துளியாய் நிம்மதியையும்
துளித்துளியாய் சலனத்தையும்
கோர்த்துக்கொண்டு
கனமற்றுக் கடக்கிறது
நூற்றாண்டுகளை.

மிக உயரத்திற்குச் சென்று
உங்களைப் போலவே எனக்கும்
குதிக்கத்தோன்றியது
தினம் பெருகும் வெக்கையை
இழுத்து உறித்துவிட்ட உடலோடு.
ஆழத்தில் கரைகிறது கடலாய்.

கரையில் தவழ்ந்து போகிறது
புத்தம் புதிதான உடல்.
நான் நீராக …
எவ்வளவு இலேசாக இருக்கிறேன்.
நான் அலையாக …
எந்தப் பிடியிலும் அகப்படாமல் துள்ளுகிறேன்.
நான் கடலாக …
எல்லாத் திக்கிலும் திறந்துகொண்டேன்.

    எல்லாம் வெயில் வந்து உலர்த்தும் வரை.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக