செவ்வாய், 3 ஜனவரி, 2017

சுக்குக்காப்பிக்கும் ஒரு கதை
















இன்று கண்டடைந்த 84வது சுக்குக்காப்பியும்
தனியாகத்தான் உட்கார்ந்திருந்தது.
காலகாலத்திற்கும் நெகிழ்ந்திருக்கும் அதன் சரீரம்
சிதறியிருக்கிறது துகள்துகளாக.
விரல்களால் டம்ளரை வருடுகையில்
உடலெங்கும் நீரலையும்
அதன் கதையை ஓயாமல் சொல்லுகிறது.
இவ்வளவு சனத்திரளில்
இத்தனை சிறிய மேசையில்
வந்து தேங்கியிருக்கிறது
அலைகளை விழுங்கிய கடல்.
உத்திரம் நோக்கும் அதன் வட்ட வதனம்
பரிசுத்த கண்ணாடிபோல் ....
எட்டிப் பார்ப்பவர்களை காட்டிக்கொடுத்தபடி
காலம் தள்ளுகிறது.