ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013



நீண்ட கயிறு கொண்ட வாளியை
என் கிணற்றுக்குள் எறிந்திருக்கிறேன்
ஆடிஆடிச் செல்கிறது
என் அந்தரங்கத்தில் மோதும்
கிளர்ச்சியோடு
பிறண்டு நிமிர்ந்ததில் அள்ளிவிட்டது
உனது சொல்லை
அதன் சப்தத்தைக் கேட்காமல் சென்றுவிடாதே
கயிற்றின் வழி வேகமாக ஏறிக்கொண்டிருக்கிறது அது
வளர்த்து வந்த பிரியத்தைக் கைமாற்ற அறியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக