திங்கள், 17 அக்டோபர், 2016

அந்த மழை வந்திருக்கிறது















மண் சிறு குழந்தையாகிவிட்டது
நகரம் விநோதமான ஒரு பொம்மை
உடல் உழவனின் நிறத்தை அப்பிக்கொண்டது
உதிர்ந்துகொண்டிருக்கிறது கிளிகளின் தானியம்
வேறொன்றுமில்லை
தொல்பாடல் என்ற மழை
நம் காலத்தை உடைத்துக்கொண்டு விழுகிறது
கேட்கிறதா ...
மூதாதையின் செவிமடலை எடுத்து வையுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக