ஒன்றும் நிகழாத பொழுதொன்று
ஆகாயத்தில் மேகத்திற்குமேல் மிதக்கிறது
உடலிற்கு சாவி கொடுத்துவிட்டு
பறந்துசென்று மேலமர்ந்தது உயிர்
சுற்றிப் பார்த்தது ...
ஒலி எழுப்பியது ...
கிளர்ச்சியுடன் சிறகடித்தது ...
கூட்டிற்குள் புகுந்தது
ஒவ்வொரு நாளையும்
மரணத்திலிருந்து இழுத்துப் பறக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக