திங்கள், 3 அக்டோபர், 2016


அகாலத்தில் தொலைந்த கவிதை 

 
















ஒரு சொல்லும் கிடைக்காத கவிதையொன்று
தெருத்தெருவாக அலைகிறது.
இளவேனிற் மரங்களின் கிளைகளையும்
வறண்ட நதியை இழுத்துச்செல்லும் பருவங்களையும்
மலைகளுக்கிடையே தனித்துப்பாடும் தேன்சிட்டையும்
விட்டு விட்டு
எங்கோ பார்த்தபடி அலைகிறது.
நிர்கதியாய் திரியும் அதன்
தோள்பட்டையை அண்டியபடி நடந்து செல்கிறேன்
சொல் ஒன்றுக்கு திராணியற்று.
ஒரு வித்தின் கனத்திற்கு நிகரான
சொல்லுக்குத் திரிந்த அக்கவிதை
பனி கொட்டி கருகிய மரமாய்
இறுகித் தொலைந்தது அகாலத்தில்.


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
ஓவியம் - Sam Sidders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக