வியாழன், 29 செப்டம்பர், 2016



அந்த அலைகள் தாத்தாவுடையது    














முதன்முதலில் எனக்காக
அலைகளைக் கூட்டி வந்தார் தாத்தா.
கடலுக்குள் நுழையவிடாமல் எட்டி நின்று
என் அலைகளை அசைக்கச் சொன்னார்.
சின்ன வயதில்
அந்தப் பேருந்து விரைந்து செல்கையில்
எதிரே கடல் வந்து நின்றதை
இப்பொழுது என்னவென்று சொல்ல.
என் தாத்தாவின் ஒரு புகைப்படமும்
என்னிடம் இல்லை.
பதிலாக
கடல் நடுவே ஒரு படகு மிதக்கிறது,
தொலைவில் ஒரு முதிர்ந்த அலை
ஆகாயம் செல்கிறது.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கடல் பார்க்கிறேன்.
மாறாமல் முதல் அலையில்
எப்பொழுதும் தாத்தா வருகிறார்.



நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக