திங்கள், 16 மே, 2016

வாழ்வு சதா குழந்தையாகவே தவழ்கிறது




காலைவேளை மங்கிய நிலவினடியில்
ஒற்றையாய் அசைந்துசெல்லும் கொக்கு
நீர் வளையங்களை விடுவிக்கின்றது.
சில தாமரை இலைகளையும்
கொஞ்சம் மீன் குஞ்சுகளையும்
நானதில் வளர்த்து வருகிறேன்.
நிதானமான மேகத்தைப்போல்
சின்னஞ்சிறு படகொன்றில்
ஒருநாள் இதை கடந்து செல்லுங்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக