புதன், 13 ஏப்ரல், 2016



இரண்டு உடல்



ஊடுருவும் மதிய வெயிலில்
பாலத்தின் மேலிருக்கையில்
புறாக்களின் இறக்கை ஒலி
கேட்டுவிடக்கூடுமெனில்
எல்லாமும் மீண்டுவிடும்.
பாலம் இறங்கித் திரும்புகையில்
பெண்ணொருத்தி கசியவிடும்
மனம் பிறழ்ந்த புன்னகையில்
மீண்டதனைத்தும் உறைந்துவிடும்.
எதிரே பிரியும் இரண்டு சாலையில்
உடல் பிளந்து சென்றுவிட
வீடு செல்லும் வழி தவறி
சாலையோரம் கிடக்கிறது
சலனமழிந்து இருண்ட நிழல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக