துள்ளும் வால்தான் இது
சிதைந்த தேகத்தோடு
சரியச்சரிய நொண்டிச்
செல்லும் யாசகனின்
கால்களில் குலையும்
நாயொன்றின் துள்ளும்
வால்தான்
இக்கவிதை.
என் கண்ணுக்குள்
ஆடி
உங்கள் விரல்களின்
இரத்த ஒட்டத்தில் உரசுகிறது.
அவனுக்கென யாருமற்ற
பாதையில்
நாயது ஆகாயம் விரித்தது.
இங்கிருக்கும்
வார்த்தைகள்
நட்சத்திரங்களாய்
உற்றுக்காண்கிறது.
யாசகனின் கைக்கோல்
அசைவு
மானின் இதமான பாய்ச்சலாய்
இப்போது புல்நிலம்
மேவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக