வெள்ளி, 23 ஜூன், 2017
புதன், 21 ஜூன், 2017
மழைக்கு அருகாமையில் நின்ற பொழுதுகள்
ஒவ்வொரு கார்காலத்திலும்
சொற்கள்
தொப்பலாக நனைந்துவிடுகின்றன.
உன்னிடம் சொல்ல
எதுவும் இருப்பதில்லை.
நமக்கிடையிலான
தொலைவை
இந்தத் தண்ணீர்
பதற்றமாக நீந்திக் கடக்கிறது.
•
24X7
காய்ந்து உருகும்
தார்ச்சாலை
இருளில் கொட்டும்
பேரன்பால்
திசைக்கு ஒன்றாகச்
சிதறி
மழையின் வீட்டிற்குப்
போய்விடுகிறது.
•
இருளில் மழை கொட்டுவது
நீ சிரித்துக்கொண்டே
பேசுவது.
•
குழந்தைகளற்ற
பள்ளி வளாகத்தை
சுற்றிச்சுற்றி
வருகிறது மழை.
அந்தச் சொற்களின்
ஞாபகங்களால்
குழைந்து நிற்கின்றன
பூமரங்கள்.
•
மழை அத்தனை இறகாலும்
நிலம் நோக்கி அசைய…
நிலம் ஒவ்வொரு
கண்ணாலும் அதிராமல் காண…
•
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)