வெள்ளி, 23 ஜூன், 2017

ஒலியின் உடல் 

















ஒரு குழந்தை காற்றில் நிறைந்திருப்பதைத்தான்
இசை என்று சொல்லி வந்தேன்.
கண்ணீர் ஆவியானதென அறிந்த தருணம்
எனது துயர அறையில் வசிக்கும் ஒருவனை நினைத்துக்கொண்டேன்.
எனதுடலே ஒலிக்கூண்டாக அதிர்ந்த சமயம்
பிறந்த கணத்தை நினைவிற்கு மீட்டெடுத்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக