வெள்ளி, 13 ஜூலை, 2012

1




ஒருநாள் முடிவதற்கான துயரத்தை
காற்றில் சலசலக்கும் மரக்கிளை
தடுமாறி வீழும் இலைகள்
பாதை புரியாத ஓடையிடம் பகிர்ந்துகொண்டது
கிளைபிரிந்து தரைதொடும் வரையான காயங்களை
நிலத்தோடும் பாறையோடும் முகிலோடும்
பகிர்ந்தும் தீரா ஈரத்தோடு
பெருகியோடும் நீர்த்துளிகள்
நுரைகளை மட்டுமே வேடிக்கை பார்க்கும்
கரையில் உடைந்து கிடக்கும் மணல்.






1 கருத்து:

  1. நண்பா,வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஆ.கிருஷ்ண குமார்

    பதிலளிநீக்கு