திங்கள், 1 ஜூலை, 2013


வீடு திரும்பாதவன்

















சொற்களில் மிதக்கவிட்ட நட்சத்திரங்களுக்கடியில்
வீட்டின்
காய்ந்த சிறு செடி படுத்திருக்கிறது.
ஓயாமல் வண்ணங்கள் அடித்துக்கொண்டிருக்கிறேன்
மேற்கூரையில் ஒட்டடைக்கும் மேலே
பலதிசையில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளுக்கு.
என் இருண்ட பிரதேசத்தில்
அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டே கிடக்கிற
அவளின்
அவனின்
அவர்களின்
அநாதைப் பிரியங்கள்
விழியசையாமல் எதையோ நோக்கியிருக்கிறது.
அவன், அவள், அவர்கள், அது, இது, எதுவும்
என் சொற்களைத் திறந்து பார்ப்பதில்லை,
என் காது கேட்காத சொற்களைத்
திறந்து பார்ப்பதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக