ஞாயிறு, 12 ஜனவரி, 2014

சாயம்போன ஒளியில் அணில்


பதட்டத்திலும் குழப்பத்திலும்
ஒடிந்த கிளையின் நுனிக்கு
ஓடிஓடித் திடுக்கிடுகிறது அணில்.
இந்தக் கிளைகளெல்லாம்
அரவமற்றும் குறிப்பற்றும்
காற்றுக்குள் முறியும் இயல்பானவை.
அந்தரத்தில்
அந்தக் கிளை பயணித்த
தடத்தில் தெரியும்
சாயம்போன ஒளியைப் பார்க்கிறது.
பார்த்துவிட்டுப்
பார்த்துவிட்டு
ஓடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக