திங்கள், 27 ஏப்ரல், 2015



அகதி ரயில்



அகதி வாடை காற்றை நெரிக்க
இந்நகரம் மழையாய்ப் பெய்கிறது.
அவன் நிலத்திலிருந்து சிதைக்கப்பட்ட கால்களும்
வயலிலிருந்து பிடுங்கப்பட்ட கைகளுமாய்
தனிமையில் நைந்த சொற்களோடு
இந்நகரின் வெயிலை நனையவிடுகிறான்.
மழையின் பாடலுக்கு
காது கொடுக்கும் வாய்ப்பற்றவன்
ரயிலின் பாடலுக்கு
மூலையில் சுருண்டு
கனவின்மேல் படுத்துக்கொள்கிறான்.
அவனது சொந்த ரயில் பற்றிய
அறிவிப்புகளில்
அவனூரின் மேகம் குளிர்ந்து
கனவில் ஈர மழையாய் ஓட…..
அகதி வாடை காற்றை நெரிக்க
இந்நகரமே மழையாய்க் கொட்டி
அலுத்துக்கொண்டிருக்க
அவனது நினைவின் ஒரு சரடு பற்ற
நெருங்கிவிட்டது ரயில்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக