வியாழன், 6 மார்ச், 2014

பாடல் கேட்கும் நட்சத்திரம்


இந்த முன்னிரவில்
எனது அறையிலிருந்து
வானத்திற்குப் பாய்கிறதொரு நதி.
நீரில் ஒரு பாறை விழுந்து
உடைந்து
மீனாகி
நீந்திக் கரைந்து
நட்சத்திரமாகி தரையில் விழுகிறது.
நதியும் நட்சத்திரமும்
பாடல் வரியில் அல்ல வரிக்குள்
நீண்டும் நெளிந்தும் ஒளிர்ந்தும்
பூட்டிக்கொண்டு சிரிக்கின்றது.
இசையுள்ளே காற்றாம்
அறையுள்ளே வானமாம்
இரவில் நான் மின்னுகிறேனாம்
கண்களை சாத்திக்கொண்டு.

நன்றி : padhaakai.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக