வெள்ளி, 7 மார்ச், 2014

துயிலெழும் ஆன்மா 



இந்தப் பொழுதை
இரண்டு கைகளாலும்
யாரோ வாசிக்கிறார்கள்.

தகிக்கும் இத்தார்ச்சாலையில்
துயிலும் என் ஆன்மாவின் செவியருகே
குரலொன்று வளைந்துநெழிகிறது.

சப்த நெரிசலுக்கிடையில்
கொத்துச் சிறகாய் மேலெழுந்து
ஆவி அலைகிறது ;
கூடவே
மேகத்தைப்போல்
மெதுமெதுவாய்க் கலைகிறது காலம்.
அல்லது
இந்த கானத்திற்கு
நகரமே நடனமாய் அசைந்துகொடுக்கிறது.

வாகனத்தை நிறுத்திவிட்டுச்சென்று
யாரிடமோ பேசுகிறேன்
இவனென்னவோ
ஒரு பாடலுக்கு அசைப்பதைப்போல்
தலையைத்தலையை ஆட்டுகிறான்.

நன்றி : padhaakai.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக